பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நீந்தத் தெரிந்தவர் நீந்திச் சென்றனர் நீந்த முடியாதோர் நீரில் மூழ்கினர். நீந்தத் தெரிந்த கந்தனும் முடிவில் ந்ேத முடியாமல் நீரில் மூழ்கின்ை. எத்தனை முயற்சிகள் எடுத்தும் சிலரே பத்திர மாகவே பிழைக்க முடிந்தது. தந்தையைக் காக்க பயணம் செய்தவன் கந்தன் பயணமே கடைசியாய் ஆனது, சனிபோல் வந்தஓர் அற்ப ஆசையும் வினையாய் முடிந்தது வீண்விளையாட்டால் சிறுவர் யாவரும் சந்தோஷம் பெற குறும்புகள் செய்யலாம் தவ்றே இல்லை. காலம் அறிந்தே கருத்தினை உணர்ந்தே சிலமாய்ச் செய்தால் சிறப்பும் பெறலாம்.