பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குட்டி எட்டும் திடுக்கிட்டே
குட்டிக் கரண மிட்டதால்
எட்டிப் பிடிக்கத் தாவுமுன்
குட்டி எலியும் மறைந்ததே

கேள்வி

என்னைக் கண்ணே தங்கம் என்றே
எப்பவும் கூப்பிடும் அம்மா நீ
கன்றுக் குட்டிதன் அம்மாவைக்
கத்தியே அம்மா என்றழைக்கும்

ஆனால் கன்றினை அதனம்மா
அம்மா என்றே அழைக்குதம்மா !
ஏனோ இப்படி என்றெனக்கே
இப்போ விளக்கிச் சொல்லம்மா!

23