இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மாலைப் பொழுதும் சாய்ந்தவுடன்
மனையின் முன்னால் வாசலிலே
கோலம் இட்டதில் அழகாகக்
குத்து விளக்கை ஏற்றிவைத்து
பத்துச் சிறுமிகள் நாமெல்லாம்
பாங்காய்ச் சுற்றிலும் கை கோத்து
தத்தா தாதை தையென்றே
நர்த்தன மாடி மகிழ்ந்திடுவோம்
தாதை தைதா தித் தைதா
தாதை தைதா தித் தைதா
தத்தா தாதை தையென்றே
நர்த்தன மாடி மகிழ்ந்திடுவோம்
313