பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பத்து வாத்துக் குஞ்சுகள்
அத்தை வீடு சென்றன
கத்திக் கத்தி வழியிலே
மெத்தக் காவல் வேண்டின


கன்றுக் குட்டி மூன்றுடன்
கழுதைக் குட்டி ரண்டுமே
ஒன்றுக்கொன்று போட்டியாய்
ஓடிக் காவல் புரிந்தன

குள்ள நரியும் வந்தது
குறுகிக் கூனிப் பார்த்தது
கள்ளப் பார்வை கண்டுமே
கதறிக் குஞ்சுகள் கூவின

எட்டி உதைக்கக் கால்களை
மெட்டிக் கழுதைக் குட்டிகள்
தட்டி வீசிடக் கன்றுகள்
முட்டிப் பாய வந்தன

32