பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


ஈயம் பூசும் கலாய்க்காரா
என்றன் வீட்டிற் குள்ளே வா
ஞாய மாகக் கூலி கேட்டால்
நானும் கொடுப்பேன் சாமான்கள்

சின்ன வீட்டைக் கண்டு நீ
சிரிக்க வேண்டாம் வந்துபார்
என்ன என்ன சாமான்கள்
எத்தனை எத்தனை என்றுபார்

சுண்டாச் சட்டிகள் நான்குண்டு
சோற்றுத் தட்டமாம் ஓடுண்டு
அண்டா, குண்டா உண்டிங்கே
அடுக்குப் பாத்திரம் கிளிஞ்சல்தான்

குருவிச் செப்புகள் மூன்றுண்டு
கூடை முறமும் உண்டுபார்
வரவும் உனக்குத் தடையுண்டோ?
வந்தே ஈயம் பூசுவாய்

40