பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அம்மா கேட்டதும் அப்பாவும்
அழைத்துச் செல்வார் படம்பார்க்க
சும்மா வீட்டை. எறிந்துமே
சோடி போட்டுச் செல்லுவார்

என்ன இந்த அம்மா தான்
யாரையும் உடனே நம்புவார்
சொன்ன தெல்லாம் உண்மையோ
சுத்தமாய் அம்மா குழந்தைதான்.

நாட்டில் நடக்கும் திருட்டெலாம்
நாளும் எடுத்துச் சொல்வதும்
வீட்டைக் காவல் புரிவதும்
வேலை எனக்குத் தானிங்கே.

50