பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மரவட்டைப் பெண்ணே வாவாவா.
மழையும் வந்தது வாவாவா
சுருள்வட்ட மிட்டே படுக்காதே
துளியும் பயமே கொள்ளாதே.

ஆயிரம் ஆயிரம் சிறுகால்கள்
ஆரே உனக்குத் தந்தவர்கள்?
ஆயிரங்காலில் முள் தைத்தால்
அய்யோ எத்தனை நோவாகும்!

உருக்குச் சக்கர ரயிலைப்போல்
ஒழுங்காய்த் தரைமேல் செல்கின்றாய்
செருப்புச் சோடுகள் வேண்டாவோ?
சின்னக் கால்களும் வலியாவோ?

54