பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாட்டின் தந்தை காந்தி

தாய்:

இந்திய நாட்டின் தந்தை
என்ன சொன்னார் காந்தி?
சிந்தனை செய்தே சொல்வாய்;
திடமாய் மனதிற் கொள்வாய்.

குழந்தை:

காந்தித் தாத்தா சொன்னார்,
கடவுளைத் தொழவே சொன்னார்;
சாந்தம் அன்பும் சொன்னார்,
சத்தியம் பேசவே சொன்னார்.

63