இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நடை பாதையில் நடப்போம்
நடு ரோட்டில் நடந்து சென்றால்
நமக்குத்தானே துன்பம்
நடை பாதையில் நடந்து சென்றால்
நமக்கு வரும் இன்பம் !
பாதை யிலே இடது புறம்
பார்த்துப் போக வேண்டும் !
பாது காப்பு நமக்கு உண்டு
பத்திரமும் உண்டு !
சாலையிலே கடந்து போக
சாமர்த்தியம் வேண்டும்!
பாலம் தன்னை பயன்படுத்தி
பார்த்து நடக்க வேண்டும் !
ரோட்டினிலே அவசரமாய்
குறுக்குப் பயணம் வேண்டாம் !
மாட்டிக் கொண்டால் துன்பமுண்டு
மறந்து போக வேண்டாம் !
18