இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சேவலைப் பார்
சேவலைப் போல நிமிர்ந்துநட
செல்லும் வழியைப் பார்த்துநட !
குயிலைப் போலே கூவிடுவாய்
குருவியைப் போலே தாவிடுவாய் !
மயிலைப் போலே ஆடிடுவாய் !
மானைப் போலே ஓடிடுவாய் !
ஒன்றாய் வாழ்வது ஒற்றுமையாம்
ஒற்றுமை அன்பின் முற்றுகையாம் !
நன்றாய் வாழ்வது அறிவுடைமை
நலமாய் இருப்பது நம் கடமை !
பணிவாய் இருந்தால் சுகம்கிடைக்கும் !
படித்தே வாழ்ந்தால் புகழ்கிடிைக்கும் !
துணையாய் வாழ்ந்தால் துயர்நீங்கும் !
தோழமை கொண்டால் செயல்ஓங்கும் !
29