பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநாள்



ஊரில் வந்தது ஒருநாள்
ஊரார் விரும்பிய திருநாள் !
தேரில் தெய்வம்வரும் நாள்
தேடியே இன்பம் தரும்நாள் !


தெருவில் எங்கும் ஊர்வலம்
தெரிந்தவர் முகத்தில் குதுாகலம் !
தரையில் போட்டனர் கோலம்
தட புடல் போட்டது மேளம் !


புதிதாய் உடைகளும் அணிந்தார்
புன்னகைப் பேச்சிலே கலந்தார் !
விதவித மாகவே நடந்தார் !
வேடிக்கை கண்டே மகிழ்ந்தார் !


அப்பா அம்மா வந்தனர்
அன்பாய் வாங்கித்தந்தனர் !
சிப்பாய் போல் நான் நடந்தேனே !
சிரித்தே துள்ளி மகிழ்ந்தேனே !

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_பாடல்கள்.pdf/34&oldid=1341982" இலிருந்து மீள்விக்கப்பட்டது