இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வழிகாட்டி
கோழிபோல காலையிலே விழிக்கனும் - சிட்டுக்
குருவிபோல சுறுசுறுப்பாய் இருக்கனும்.
அன்னம்போல அழகுநடை நடக்கனும் - அதில்
ஆந்தைபாேல நல்ல முகம் இருக்கனும்
வண்ணக்கிளிபோலமொழி பேசனும் - அதில்
மைனாவைப் போல்இனிமை இருக்கனும்.
மாடப்புறா போலகூடி வாழனும் - தினம்
மாங்குயிலைப் போலபாடி வாழனும்
காக்கைபோல ஒற்றுமையாய் இருக்கனும் - மனம்
கருடன்போல காாியத்தை முடிக்கனும்,
யானைபோல ஞாபகமாய் வாழனும் - கூடி
எறும்புபோல வரிசையாக நடக்கனும்.
மானைப்போல வேகமாக ஒடனும் - பசு
மாட்டைப்போல மக்களுக்கு உதவனும்.
34