இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழைப் படிப்போம்
அஆ இஈ உஊஎ
ஏஐ ஒஓ ஒளஎன்றே
மொழிக்கு முதலில் வரும்எழுத்து
முதலே தமிழுக்கு உயிா்எழுத்து.
க்ஞ் ச்ங் ட்ண்த்
ந்ப் ம்ய் ர்ல்வ்
ழ்ள் ற்ன் எனும்எழுத்து
வழிவழி வருகின்ற மெய்யெழுத்து.
உயிரில் இரண்டு வகையுண்டு.
பெயரே குறில்நெடில் என உண்டு
அஇஉ எஒ குறிலாகும்
அடுத்தவை ஏழும் நெடிலாகும்.
மெய்யில் மூன்று பிரிவுண்டு.
செய்திடும் பிரிவில் சிறப்புண்டு.
ஐயம் இன்றி அறிந்திடுவோம்.
அதனதன் சுவையை உணர்ந்திடுவோம்.
35