இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கசடதபற இவை வல்லினமாம்.
ஞஙனநமண இவை மெல்லினமாம்.
யரலவழள இவை இடையினமாம்.
இனியநம் தமிழுக்குப் படையினமாம்.
உயிரும் மெய்யும் சேர்ந்துவிட்டால்
உயிர்மெய் எழித்தாய் மாறிவரும்
உயிர்மெய் எழித்தே உடல்உயிர்பாேல்
ஒன்றாய் வாழும் தமிழ் உயரும்.
உயிரெழுத் தென்பது பனிரெண்டு
மெய்யெழுத் தென்பது பதினெட்டு
உயிர்மெய் இருநூற்றிப் பதினாறு
உண்டொரு 'ஆய்தம்' நீசேரு.
சுட்டிக் காட்டும் அஇஉ
சுட்டெழுத் தாகும் சுகம்ஊட்டும்
கேள்வியைக் கேட்கும் எஏயா
ஆஓ என்பது வினாஎழுத்தே.