பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நாயும் காலையும்


அந்த வீட்டில் பன்னிரண்டு பேர் இருந்தார்கள். சிறிய கிராமத்தில் பெரிய குடும்பம் அது. அவர்கள் வீட்டுப் பின்புறத்தில் தோட்டம். அதில் வாழை, தென்னை, எலுமிச்சை மரங்கள் உண்டு. அவர்கள் யாவருமே வாழையிலையில்தான் சாப்பிடுவார்கள் உண்டபிறகு இலைகளை எடுத்து வாசலில் போடுவார்கள். எச்சிலை உண்பதற்கு ஒரு நாய் காத்திருக்கும். அவர்கள் இன்ன சமயத்தில்தான் வெளியே இலையைப் போடுவார்கள் என்று அதற்குத்