பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திரன் பெற்ற வாழ்த்து 17

போட்டுக் கொண்டான். மற்றவற்றை அம்மா வுக்குக் கொடுக்கலாம் என்று கையில் வாங்கி வைத்துக் கொண்டான், சிறிது நேரம் கழித்து அவன் சூரியனைப் பார்த்தான். அவன் எல்லா வற்றையும் தானே தின்பதைக் கண்டான். அவனுக்கு நாக்கில் நீர் ஊறியது. வாழைப் பழத்தை இலையில் போட்டுக் கொண்டான். பிறகு மாம் பழத்தையும் இ லை யி ல் போட்டுக்கொண்டு உண்டான். கடைசியில் எல்லாவற்றையுமே தின்று விட்டான்.

வருணன் வாயுவுக்கு அடுத்தபடி உட்கார்ந் திருந்தான். அவன் பட்சணங்களைக் கையில் வாங்கிக் கொண்டான். 'பாவம் ! அம்மாவுக்கு இதெல்லாம் எங்கே கிடைக்கப்போகிறது: நாம் கொண்டு போய்க் கொடுத்தால் மிகவும் சந்தோஷப் படுவாள்' என்று அவற்றைத் தனியே வைத்துக் கொண்டான். ஆல்ை தன் முன்பு அமர்ந்திருந்த தன் சகோதரர்கள் பட்சணங்களையெல்லாம் தாமே உண்டதைப் பார்த்தான். 'அம்மாவை மறந்து விட்டார்களே !' என்று எண்ணினன், ஆளுல் அடுத்த நிமிஷமே அவனுடைய புத்தி மாறிவிட்டது. வயசான அம்மாவுக்கு இதெல்லாம் எதற்கு? நமக்கு அவள் பட்சணம் ஒன்றும் பண்ணிக் கொடுக்கிறது இல்லையே t' என்று எண்ணியவன் அந்தப் பட்சணங்களையெல்லாம் தின்றுவிட்டான்.

西· பி. –2