பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடும்.ஒடும் - 23

நீங்கள் வேகமாக ஒடுவீர்கள் அல்லவா ?’ என்று ஆமை கேட்டது, - - -

அவை இரண்டும் தன்னைக் கண்டு ஆச்சரியம் அடைந்து, மரியாதையுடன் பேசுவதைப் பார்த்து அந்த மரவட்டைக்குக் கர்வம் உண்டாயிற்று,

"உங்கள் பேர் என்ன?’ என்று அவற்றைப் பார்த்துக் கேட்டது.

"என் பேர் ஆமை' என் பேர் நத்தை" என்று இரண்டும் சொல்லின.

நீங்கள் வேகமாக நடக்க முடியும்; எங்களால் முடியாது. உங்கள் வேகத்தைக் கொஞ்சம் காட்டுங்கள். எங்களால் வேகமாக ஓட முடியா விட்டாலும் உங்கள் வேகத்தைக் கண்டாவது மகிழ்ச்சி அடைகிருேம்” என்று இரண்டும் கூறின. மரவட்டையின் அழகைக் கண்டு பிரமிப்படைந்த அவற்றிற்கு அது வேகமாகப் போவதையும் கண்டு களிக்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று.

ஆல்ை மரவட்டைக்கு வேகமாகப் போக முடியாது. அதுவும் மெதுவாகத்தான் ஊர்ந்து செல்லும் என்ற உண்மை ஆமைக்கும், நத்தைக்கும் தெரியாது. கால் நிறைய இருப்பதனால் அது வேக மாக ஒடும் என்று நினைத்துக் கொண்டிருந்தன.