பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளைப் பூனை 45

அவள் எங்கேயாவது கல்யாணம் செய்துகொண்டு செளக்கியமாக இருந்தால் போதும் என்று எண்ணி வீரசிம்மனுடன் அந்த ராஜகுமாரியை அனுப்பினர் கள்.

கீழேயிருந்து வந்த வழியே சென்று படிகளின் மேல் ஏறி அவர்கள் ஆலமரத்தின் பொந்தை அடைந்தவுடன், அந்தப் பெண் வெள்ளைப் பூனே யாக மாறிவிட்டாள். அந்தப் பூனேயை எடுத்துக் கொண்டு வீரசிம்மன் தன் அரண்மனையை அடைந்

தான. -

அந்தப் பூனே மறுபடியும் பெண்ணுக மாற, அவளேக் கல்யாணம் பண்ணிக் கொண்டு வாழ வேண்டுமென்ற ஆசை அவனுக்கு இருந்தாலும், பூனேயை அடிப்பதற்கு அவனுக்கு மனம் வரவில்லை. அந்தப் பூனேயை மார்பில் வைத்துக் கொஞ்சின்ை. முனிவர் சொன்னபடி அதை அடிக்க அவன் பயப் பட்டான், ஒருகால் பூனைக்கு உயிர் போய்ப் பெண்ணுகா விட்டால் என்ன செய்வது? என்னும் எண்ணமும் உண்டாயிற்று.

எவ்வளவு நாளேக்கு அந்தப்பூனேயை வைத்துக் கொண்டு கொஞ்சுவது? ஆகவே, முனிவர் சொன்னபடியே செய்யவேண்டும் என்று தீர்மானித் தான். ஒர் அறைக்குச் சென்று தன் மடியில் பூனேயை வைத்துக் கொண்டான். கையில்