பக்கம்:நல்ல மனைவியை அடைவது எப்படி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12


ஓடிப் போகாத 'உத்தமி'களில் பலர் புருஷனோடு பத்தினித்தனம் நடிக்கும் போதே பக்கத்து வீட்டுப் பையனோடு காதல் லீலையாடத் துணிகிறார்கள். அல்லது, வீட்டு வேலைக்காரர்களோடு உறவாடுகிறார்கள். அல்லது, கணவனோடு கூடுவது மகிழ்வளியாக் காரணத்தால் 'கொழுந்தப்பிள்ளை'யோடு கொஞ்இக் கோலக்கலை பயிலும் மதனிகளாக விளங்குகிறார்கள். மருமகளை அணையும் மாமனார்களும், மாமிகளை மகிழ்விக்கும் மருமகப் பிள்ளைகளும், இன்னும் பிற லீலா விநோதர்களும் சமுதாயத்திலே-நாட்டிலே-உலகத்திலே பெருத்துப் போனதன் காரணமே இது தானே!

ஆண் என்கிற 'பாஸிட்டிவ்', பெண் எனும் 'நெகட்டிவ்' இரண்டும் கூடுவதால் எழுகிற ஒளியே குடும்ப இன்பம் என்கிறார்கள். இந்த ஜோடி சேர்க்கும் கல்யாண கைங்கர்யம் உண்மையில், தகுந்த 'பாஸிட்டிவ்' நெகட்டிவ்'களை இணைக்கும் பொறியாக அமையாது போவதால் மின்சாரம் சரியன ஒளி தரும் சக்தியில் பிறப்பதில்லை. மெலிந்து இருளடைகிறது. அல்லது அதிர்ச்சி (ஷாக்) எற்படுகிறது. இந்நிலை மாற வேண்டும் என்று விரும்புவது தானே மனித இயற்கை?

***

'ஒத்த குலம், ஒத்த குணம், ஒத்த நலன்,களுடைய தலைவனும், தலைவியும் சந்திப்பது...... சந்தித்துப் பழக தோழி துணை புரிவது...... பிறகு இருவருக்கும் மணம் முடிக்க ஆவன செய்து உதவுவது என்ற பழந்தமிழ் இலக்கிய முறை பாராட்டத் தகுந்தது.

ஒருவரை ஒருவர் அறியாத-கல்யாணமாகாத-பெண்கள் ஆண்களிலே யாரையும் யாருக்காவது