பக்கம்:நல்ல மனைவியை அடைவது எப்படி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

யாணம் செய்து கசப்புற்று விவாகரத்து பண்ணிக் கொண்டு வேறு ஜோடி நாடித்திரிவோரும் உளர்.

அதாவது, அவரவர்களே இஷ்டம்போல் பழகி 'உனக்கும் எனக்கும் பொருத்தம் சரியா?' என்று தாங்களாக்வே தீர்மானிக்க முயல்கிறார்கள். மிஸ்டர் ஏயும் மிஸ் பியும் பல மாதங்கள் ஒன்றாக அலைகிறார்கள். ஜாலி பண்ணுகிறார்கள். பரஸ்பரம் பிடிக்கவில்லை, ஒத்து வரவில்லையா ? சரி போ! பழகியது வரை ஜாலி. பிறகு உறவு காலி! அப்புறம் ஏ ஒரு மிஸ் டியையும், பி மிஸ்டர் ஈ யையும் வேட்டையாட ஓடுகிறார்கள். பிடித்துவிட்டாலோ.... கேட்பானேன் - மிஸ்டர் ஏ யும் பி யும் கை கோர்த்து மணம் புரியவும், அவள் மிஸஸ் பி ஆகிவிடுகிறாள்.

இம் முறையில் பல மலர்களோடு உறவு கொள்ளத் துடிக்கும் வண்ணத்துப்பூச்சித் தனத்துக்கு நல்ல விருந்து கிடைக்க வழியிருக்கிறது!

பெரியவர்கள் தேர்ந்தெடுத்து மணமகளின் சம்மதத்தைப் பெறுவதற்காக, சில இனத்தினர் ஒரு வழக்கத்தைக் கையாளுகிறார்களாம். அவனையும் பெண்ணையும் இரவில் தனி யறையில் படுத்திருக்க அனுமதிப்பார்களாம். காலையில் எழுந்து வரும்போது அவள் 'சிரித்த முகமும் சீதேவியு' மாகக் காட்சி யளித்து, தலையசைத்தால் அந்த மணமகனுக்கே அவள் மனைவியாக்கப் படுவாள். அவள் எரிந்து விழுந்து வெறுத்துப் பேசினால், அவன் மனு தள்ளுபடி. வேறு மாப்பிள்ளை தேடுவார்களாம்.

இவ்விதம், மணமகளாக வேண்டியவனே இளைஞனோடு பழகி அறிவதற்குப் பதிலாக, பெண்ணைப் பெற்றவளே மகளை மணம் புரியக் கோருகிற