பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22 நல்வழிச் சிறுகதைகள்

பூவரசு மரத்தின் கிளைகள் சிலவற்றை வெட்டினான். ஊரினுள் சென்று விற்றான். மறுநாளும் வந்து வேறு சில கிளைகளை வெட்டினான்.

மரத்தை வெட்டிக் கொண்டிருக்கும்போதே வெயில் உச்சிக்கேறியது. அவன் சிறிது நேரம் தன் வேலையை நிறுத்திவிட்டு, மிகுந்திருந்த கிளைகளின் கீழே நிழலில் உட்கார்ந்து சாப்பிட்டான். பிறகு தூங்கினான். மறுபடியும் எழுந்து கிளைகளை வெட்டினான்.

இப்படி ஐந்தாறு நாட்கள் அதன் நிழலிலேயே படுத்துக்கொண்டு, மீண்டும் மீண்டும் அதன் கிளை களை வெட்டினான். ஒரு வாரத்தில் மரம் முழுவதும் வெட்டி விற்று முடிந்தது.

ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் அவன் வேலை தேடிப் பக்கத்து ஊருக்குச் சென்றான் வேலை கிடைக்கவில்லை. சோர்வுடன் திரும்பி வந்தான். வெயில் கொளுத்தியது. ஆனால் களைப்பாற உட்காருவதற்கு நிழல் இல்லை. அந்த மரம் இருந்த இடத்திற்கு வந்தான்.

வெட்டித் தீர்க்கும்வரை தனக்கு அந்தப் பூவரசு மரம் நிழல் தந்தமையை நினைத்தான். ஏழு நாள் பிழைப்புக்காகத் தான் செய்த தீமையை எண்ணி வருந்தினான்.

கருத்துரை :நல்லறிவுடைய பெருமக்கள் தாம் சாகுமட்டும் தமக்குத் தீமை செய்துவருவோர்க்கும் தம்மாலானவரை அந்தத் தீயவர்களையும் காப்பாற்றவே செயலாற்றுவார்கள்