பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நெஞ்சகமும் வஞ்சகமும்

ரு காட்டில் எருது ஒன்று இருந்தது. அந்தக் காட்டின் ஒரு பகுதியில் பச்சைப்பசேல் என்று புல் மண்டிக் கிடந்தது. எருதுக்குத் தான் இருக்கும் இடத்தில் கிடைத்த புல்லே போதுமானதாக இருந்தது. எனினும், தூரத்துப் புல்லே கண்ணுக்கு அழகாக இருந்ததால், புல் மண்டிக் கிடந்த பகுதியை நோக்கி ஒரு நாள் புறப்பட்டது.

அது போகும்போது, மரத்தில் இருந்த பச்சைக் கிளி அதைக் கூப்பிட்டது. எருதண்ணா, எங்கே போகிறீர்கள்?’ என்று கேட்டது பச்சைக்கிளி. "எதிரில் உள்ள புல்வெளிக்குப் போகிறேன்; புதுப் புல் தின்னப் போகிறேன்” என்றது காட்டெருது.

"அண்ணா, வேண்டாம்; அங்கே புலியிருக்கிறது!’ என்று எச்சரித்தது பச்சைக்கிளி.

அப்போது அங்கே ஒரு நரி வந்து சேர்ந்தது

அது பச்சைக்கிளியைப் பார்த்து, ‘ஒருவர் ஒரு வேலையாகப் போகும்போது எங்கே போகிறீர்கள் என்று கேட்பதே தவறு ; மேலும் எருதண்ணா ஆசையாகப் புதுப்புல் தின்னப் போவதைத் தடுப்பது சரியில்லை. அங்கே புலியிருக்கிறது என்று. சொல்லி அவரை பயமுறுத்துவது மிகமிகத் தவறு