பக்கம்:நல்வழி நயஉரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உள்ள தொழிய ஒருவர்க் கொருவர்சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில்-வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறி னாலென்

உடலோடு வாழும் உயிர்க்கு

6


எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை-நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போல்

பிரிந்திருப்பார் பேசார் பிறர்க்கு

7


ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த வாயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாலாம்-தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்

தரியாது காணும் தனம்

8


ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமங் நாளுமல்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்

இல்லையென மாட்டார் இசைந்து

9


ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர்-வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்

எமக்கென்னென்று இட்டுண் டிரும்

10

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்வழி_நயஉரை.pdf/11&oldid=1289792" இலிருந்து மீள்விக்கப்பட்டது