இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நீரும் நிழலும் நிலம்பொதியும் நெல்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும்-ஊரும்
வரும்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றுந்
தரும்சிவந்த தாமரையாள் தான்
21
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்கு
ஆவிதான் போயினபின் யாரோ அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்
22
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே-மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை
23
நீறில்லா நெற்றியாழ் நெய்யில்லா உண்டி பாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்-மாறில்
உடன் பிறப்பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை
24
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
25
14