பக்கம்:நல்வழி நயஉரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நீரும் நிழலும் நிலம்பொதியும் நெல்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும்-ஊரும்
வரும்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றுந்
தரும்சிவந்த தாமரையாள் தான்

21


பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்கு
ஆவிதான் போயினபின் யாரோ அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்

22


வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே-மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை

23


நீறில்லா நெற்றியாழ் நெய்யில்லா உண்டி பாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்-மாறில்
உடன் பிறப்பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை

24


ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

25

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்வழி_நயஉரை.pdf/17&oldid=1289802" இலிருந்து மீள்விக்கப்பட்டது