பக்கம்:நல்வழி நயஉரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை
தான்ம் தவம்உயர்ச்சி தாளாண்மை-தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்

பசிவந் திடப்பறந்து போம்

26


ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்

எனையாளும் ஈசன் செயல்

27


உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந்து எண்ணுவன-கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்

சாந்துணையும் சஞ்சலமே தான்

28


மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி
இரங்தழைப்பார் யாவருமங் கில்லை-சுரங்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்

உற்றார் உலகத் தவர்

29


தாந்தாமுன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே-வேந்தே!
ஒறுத்தாரை யென்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா

வெறுத்தாலும் போமோ விதி

30

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்வழி_நயஉரை.pdf/19&oldid=1289805" இலிருந்து மீள்விக்கப்பட்டது