பக்கம்:நல்வழி நயஉரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



புண்ணியமாம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
மண்ணிற் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லும்

தீதொழிய நன்மை செயல்

1


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதிவழுவா நெறிமுறையின்-மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி

2


இடும்பைக் கிடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங்கடுக
 உண்டாயி னுண்டாகும் ஊழின் பெருவலிநோய்

விண்டாரைக் கொண்டாடும் வீடு

3


எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால்-கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே

ஆங்கால மாகும் அவர்க்கு

4


வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றால் போகா-இருந்தேங்கி
நெஞ்சம்புண் ணாக நெடுந்துரம் தாம்கினைந்து

துஞ்சுவதே மாந்தர் தொழில்

5

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்வழி_நயஉரை.pdf/9&oldid=1289790" இலிருந்து மீள்விக்கப்பட்டது