இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மூதுரை
15
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன்சிறப்புடையன்-மன்னனுக்குத் தன்றேசம் அல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச் சென்றவிட மெல்லாஞ் சிறப்பு.
(26)
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தோர் சொற் கூற்றம்
அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம்-மெல்லிய வாழைக்குத் தானின்ற காய்கூற்றம் கூற்றமே இல்லிற் கிசைந்தொழுகாப் பெண்.
(27)
சந்தன மென்குறடு தான் தேய்ந்த காலத்தும் கந்தம் குறைபடா தாதலால்-தந்தம் தனஞ்சிறிய ராயினும் தார்வேந்தர் கெட்டால் மனஞ்சிறிய ராவரோ மற்று.
(28)
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல உருவும் உயர்குலமும் எல்லாம்-திருமடந்தை ஆம்போ தவளோடும் ஆகும் அவள்பிரிந்து
போம்போ தவளோடும் போம்.
(29)
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை ஆந்தனையுங் காப்பர் அறிவுடையோர்-மாந்தர் குறைக்குந் தனையும் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம்.
(30)