இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நல்வழி
25
நீரும் நிழலும் நிலம் பொதியு நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும்-ஊரும்
வருந்திருவும் விரிழ்நாளும் எஞ்சமிலார்க் கென்று
தரும் சிவந்த தாமரையாள் தான்.
(51)
பாடுபட்டுப் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்
காவிதான் போயின பின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.
(52)
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே-மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.
(53)
நீறில்லா நெற்றியாழ் நெய்யில்லா உண்டி பாழ்
ஆறில்லா ஊருக் கழகுபாழ்-மாறில்
உடற்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை.
(54)
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை
எல்லார்க்குங் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.