பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நல்வழி 27

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை-தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் சிவந்திடப் பறந்து போம். (56)

ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட்டொன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல். (57)

உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் எண்பது கோடிநினைந் தெண்ணுவன்- கண்புதைத்த மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாந்தனையும் சஞ்சலமே தான். (58)

மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவருமங் கில்லை-சுரந்தமுதம் கற்றா தரல்போல் கரவா தளிப்பரேல் உற்றார் உலகத் தவர். (59)

தாந்தாமுன் செய்தவினை தாமே அனுபவிப்பார் பூந்தா மரையோன் பொறிவழியே-வேந்தே ஒறுத்தாரை என் செயலாம் ஊரெல்லாம் ஒன்றா வெறுத்தாலும் போமோ விதி. (60)