இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நன்னெறி 41
கொள்ளுங் கொடுங்கூற்றம்
-கொல்வான் குறுகுதன்முன் உள்ளங் கனிந்தறஞ்செய் துய்கவே-வெள்ளம் வருவதற்கு முன்னர் அணைகோலி வையார் பெருகுதற்கண் என்செய்வார் பேசு, (91)
பேரறிஞர் தாக்கும் பிறர் துயரம்
தாங்கியே வீரமொடு காக்க விரைகுவார்- நேரிழாய் மெய்சென்று தாக்கும் வியன் கோ லடிதன்மேல் கைசென்று தாங்கும் கடிது. (92)
பன்னும் பனுவிற் பயன்தேர்
அறிவிலார் மன்னும் அறங்கள் வலியிலவே -நன்னுதால் காழொன் றுயர்திண் கதவு வலியுடைத்தோ தாழொன் றிலா தாயின் தான். (93)
எள்ளா திருப்பு இழிஞர்
போற் றர்குரியர்
விள்ளா அறிஞரது வேண்டாரே
- தள்ளாக் கரைக்காப் புளது நீர் கட்டு குளம் அன்றிக் கரைகாப் புளதோ கடல். (94)
அறிவுடையார் அன்றி அது
பெறார் தம்பால் செறிபழியை அஞ்சார் சிறிதும் - பிறைநுதால் வண்ணஞ்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக் கண்ணஞ்சு மோ இருளைக் - கண்டு. (95)