பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8

என்பது நவகாளி யாத்திரைக்கு முன்னால் மகாத்மா காந்தி நடத்திய பிரார்த்தனைகளில் சாதாரணமாகப் பாடப்பட்ட ராம பஜனை.

நவகாளி யாத்திரையின்போது மகாத்மா பின்வரும் இரண்டு வரிகளைப் புதிதாக மேற்படி ராம பஜனையில் சேர்த்துக் கொண்டார்.

ஈசுவர அல்லா தேரே நாம்
ஸ்ப்கோ ஸன்மதி தே பகவான்!”

(ஈசுவரன் என்றாலும் அல்லா என்றாலும் உன்னுடைய திருநாமந்தான். பகவானே! எல்லாருக்கும் நல்ல புத்தியை அருள்க.)

ராம பஜனையில் இந்த வரிகளை மகாத்மா சேர்த்தபோது ஹிந்துக்களில் பெரும்பாலோருக்குப் பிடிக்கவில்லை. இவ்வளவு கொடூரமான காரியங்கள் நாட்டில் நடந்த பிறகு ராமர் பெயரோடு அல்லாவின் பெயரைச் சேர்ப்பதற்கு ஹிந்துக்களின் மனம் இடங் கொடுப்பது கஷ்டந்தான். ஏதோ சிலர் காந்திஜி சொல்கிறாரே என்று ஒப்புக் கொண்டனர்.

ஆனால், காந்தி மகான் ஜனவரி 30-ஆம் தேதி உயிர்த்தியாகம் செய்த பிறகு, எத்தனை லட்சக்கணக்கான ஹிந்துக்கள் மனத்தில் சிறிதும் தயக்கமோ, கல்மிஷமோ இல்லாமல், 'ஈசுவர அல்லா தேரே' நாம் என்னும் பஜனை வரியை விம்மிக் கொண்டும் விசித்துக் கொண்டும் பாடியிருக்கிறார்கள்!

ஹிந்துக்களின் மனமாறுதலைக் காட்ட இதைக் காட்டிலும் வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?

ஜனவரி 30-ஆம் தேதி சம்பவம் நம்மையெல்லாம் ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது. அதனால் ஏற்பட்ட