பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

47


நிர்மாணித்திருக்கிறார். அந்த மகத்தான ஆலயத்துக்கு அஹிம்சை, சத்தியம், சாந்தம், சகோதரத்துவம், சமத்துவம் முதலியவையே அஸ்திவாரமாக அமைந்திருக்கின்றன. வகுப்புக் குமுறல்களையும், கடும் புயல்களையும் என்றென்றும் எதிர்த்து நிற்கக் கூடிய சக்தி மகாத்மா கட்டும் அந்த மாபெரும் ஆலயத்துக்குத்தான் உண்டு. 

'போய் வருகிறேன்'

நவகாளி ஜில்லாவிலே மகாத்மாவின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த யாத்திரையில் கலந்து