பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

81


பீகார் கலவரத்தைக் கேள்வியுற்றது முதல் மகாத்மாஜியின் மனம் பெரும் வேதனைக்குள்ளாகி இருக்க வேண்டும். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்குப் பிராயச்சித்தமாகத் தம்முடைய சொற்ப ஆகாரத்தையும் குறைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதன் காரணமாக அவர் உடல்நலம் வெகுவாகக் குறைந்ததுடன் தேக நிறையிலும் ஐந்து பவுண்டு குறைந்து விட்டது.

நேருஜியிடமிருந்து, 'பீகார் நிலவரம் கவலைக்கிடமில்லை' என்று தந்தி வந்த பிறகே மகாத்மாவின் கவலை நீங்கிற்று. செளமுஹானியில் அன்று மாலை நடந்த பிரார்த்தனைக் கூட்டத்துக்கு முப்பதாயிரம் முஸ்லிம்கள் விஜயம் செய்திருந்தார்கள். மகாத்மாவும் வங்காளத் தொழில் மந்திரி ஜனாப் ஷம் ஷாலிதீனும் செய்த உருக்கமான பிரசங்கத்தைக் கேட்டு முப்பதாயிரம் முஸ்லிம்களும் கண்ணீர் வடித்தார்கள்.

இதற்குப் பிறகு காந்திஜி பல ஊர்களுக்கு விஜயம் செய்தார். ஆங்காங்கே பல கோரக் காட்சிகளையும், கொள்ளிக் கட்டைகளையும், மண்டை ஓடுகளையும் நேருக்கு நேர் கண்டார். பல குடும்பங்கள் வீடு வாசல்களை இழந்து திக்கற்ற நிலையில் தவிப்பதையும் பார்த்தார். தம்முடன் வந்தவர்கள் யாவரையும் தனித்தனியாகப் பிரிந்து சென்று ஆங்காங்கே அவதிப்படும் அகதிகளுக்கு விடுதி ஏற்படுத்தி, கஷ்ட நிவாரண வேலைகளில் ஈடுபடும்படி உத்தரவிட்டார்.

மகாத்மாஜியின் கட்டளைக்கிணங்கி அவருடைய காரியதரிசி பியாரிலாலும், சுசேதா கிருபளானியும்,