பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

85


காந்தி மகாத்மாவின் விருப்பமும், நவகாளி யாத்திரையும் பூர்த்தி பெறாமலே முடிந்துவிட்டன.

★ ★ ★

மகாத்மாவின் நவகாளி யாத்திரையில் கலந்து கொள்ளும் பேறு பெற்ற நான் அவரை முதன் முதலாக ஸ்ரீநகர் என்னும் கிராமத்தில் சந்தித்தேன். ஏகாந்தப் பிரயாணம் செய்துகொண்டிருந்த மகாத்மாவுடன் ஒரு சில பத்திரிகை நிருபர்களே அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். எனவே, முன்கூட்டி எவ்வித அனுமதியும் பெறாமலே நவகாளியில் மகாத்மாவுடன் சுற்றுப் பிரயாணம் செய்யச் சென்றிருந்த நான் முதலில் சற்று திக்பிரமை கொண்டேன்.

"மகாத்மாஜியின் அனுமதியைப் பெறுவது சாத்தியமே இல்லை" என்று அங்கிருந்த பத்திரிகை நிருபர்களும், வங்காள யூனிவர்ஸிடி புரொபலர் நிர்மல் குமார் போஸும் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள்.