28 எஸ். நவராஜ் செல்லையா
குமார் : (அவசரத்துடன்) என்ன சொன்னுரு?
மோகன் அரையாண்டு தேர்வில, வகுப்பில் நீ முதல் மார்க் வாங்கு பொங்கல் பரிசா உனக்கு புது சைக்கிளே வாங்கித் தர்றேன். அப்படின்னு சொல்லிட்டாரு. -
குமார் : புது சைக்கிளா! பலே! பலே! நீ கேட்டதோ பழைய சைக்கிள். வரப்போறதோ புது சைக்கிள். உனக்கு லாபம் தானே.
மோகன் : இலாபத்துக்கு முன்னே, அப்பா சொன்ன கருத்தைக் கவனிக்கனும். என்னல முதல் மார்க்கு வாங்க முடியாதுன்னு அப்பாவோடா நம்பிக்கை.
குமார் : கால் ஆண்டுத் தேர்விலேயும் நீதானே முதல்
மார்க்கு.
மோகன் : அதை என்னுேட அதிர்ஷ்டம்ன்னு அப்பா
சொல்ருரு.
குமார் : அதுக்கும், நீ இப்ப உட்கார்ந்து எழுதறதுக்
கும், என்ன சம்பந்தம் இருக்கு?
மோகன் : இருக்கு குமார். எல்லா பாடத்திலேயும் வருகின்ற அத்தனை முக்கிய கேள்விகளுக்கெல்லாம், பதிலை எழுதி, பத்திரமா வச்சுக்கப் போறேன். அப்புறம், முழுதையும் மனப்பாடம் பண்ணப் போறேன்.
குமார் : அப்போ இ னி மே நீ விளையாடவே,
வரமாட்டியா?
மோகன் : ஏன்? இன்னும் ரெண்டு நாள்லயே இந்த வேஜல முடிஞ்சுடும். அதுக்குப் பிறகு கவலையே யில்லே. விளையாட்டுக்கு விளையாட்டு. மார்க்குக்கு மார்க்கு. பரிசுக்குப் பரிசு. எப்படி என் திட்டம்?