Galų šons 67 சேகர் ; நீ முதல்ல இங்கே வா ரொம்ப அவசரம் ஓடிப் போய் 2 பட்டன் வாங்கிவா .. வேற சட்டை இல்லேடா! வீட்டில் ஊசி இருக்குதா? அதை கான் பார்த்துக்குறேன். இந்தா காசு...ஒரு...முத்து. நைலான் பட்டன் தெரியுதா? முத்து சரிப்பா...இதோ வந்துடுறேன். சேகர் : சீக்கிரமா வரணும். ஆபீசுக்கு நான் போ
கணும்...புரியாதா...ஒடு.நேரமே ஆச்சு...
(முத்து போனதும் சேகர் தானே தனியாகப் பேசிக் கொண்டிருக்கிருர்). நான் வேலைக்காரியா இருந்திருக்கக் கூடாதா? என் கூடவாவது என் மனைவி சண்டை. போட்டபடி இருப்பாளே! - - - (கூப்பிடுதல். கோபமாக)
ஏ! கமலம்! கமலாபாய்!
கமலம் : (முக வியர்வையைதுடைத்தபடி வந்துகொண்டே).
என்னங்க! கூப்பிட்டிங்களா!
சேகர் : உன்னைக் கூப்பிட்ட நேரத்துக்கு அந்த். சரஸ்வதி தேவியை கூப்பிட்டிருந்தா கூடஒடி வந்திருக்கும்! -
கமலம் : கோவிச்சுக்காதீங்க... கிணற்றடியில ஒரு
முக்கியமான வேலை...அதலைதான்...
சேகர் : ஆமாமா! ரொம்ப முக்கியமான வேலைதான். -- வேலைக்காரியோட சண்டை போடுறது.போய். முதல்ல ஊசியை எடுத்துகிட்டுவா
கமலம் (பயந்தபடி) ஏங்க! வாயை தச்சுடப் போறிங்.
களா! -