பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ராகவன் ; நீ பேசுறதையே என்னல் புரி ஞ் சு க் க முடியலியேம்மா! லட்சுமி சொல்றேன்பா என்ன கண்கலங்காம காப்பாத்தி படிக்க வச்சிங்க. வேலை வாங்கித் தந்தீங்க... இப்ப நீங்க, வேலையை விட்டு ரிட்டயர்டு ஆகப் போறிங்க... உங்களைத் தனியே தவிக்க விட்டுட்டு, நான் திருமணம் செய்துகிட்டு புருஷன் வீட்டுக்குப் போய்ட்டா, அங்கே போய் என்னல எப்படிப்பா நிம்மதியா வாழ முடியும்! உங்களை கண் போல காத்துக்கிட்டு, கடைசி வரையிலும் உங்க கூடவே வாழனுங்குறது தாம்பா என்ைேட ஆசை! ராகவன் : உன்னுேட ஆசை தவறும்மா! திருமணத்துல தொடங்கி, குடும்பத்திலே கலந்து சங்கமமாகிறது தாம்மா வாழ்க்கை. ஒரு கன்னிப்பெண் தனியா வாழறது நல்லதுல்லேம்மா. உன்னேட கொள்கை சரி. இல்லேம்மா. உலகமும் ஒத்துக்காது. லட்சுமி : யாரைப் பத்தியும் எனக் குப் கவலையில்லேப்பா... ஆயிரம் பேர் ஆயிரம் பேசட்டும். ஏசட்டும். எனக்கு அக்கறையில்லே! நீங்க தான் எனக்கு தெய்வம். ஆண் துணையே இல்லாம, என்னல தனியா வாழ முடியும். இதைப்பத்தி திருப்பித் திருப்பி நீங்க பேச வேண்டாம்!

  • ராகவன் . இது தான் உன் முடிவுன்னு சொன்ன பிறகு, நான் பேசி என்ன பண்றது? மனஸ்தாபம் தான் அதிக மாகும். ஆன, ஒன்னு மட்டும் சொல்றேன்

ஒரு பெண் தனியா வாழ்ந்துடுவேன்னு சவால் விடுறதுக்கு, அதுக்கு தகப்பனே துணையாயிருந் தானிங்குற பழியை, என் மேல் சுமத்துறே! OK... லட்சுமி... நான் டாக்டர் வீட்டுக்குப் போய்ட்டு வந்துடுறேன். பத்திரமா இரும்மா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/34&oldid=777095" இலிருந்து மீள்விக்கப்பட்டது