பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பக்கத்து வீட்டுல திருடன் புகுந்துட்டா கூட, பார்த்து கிட்டு பேசாம இருக்குற இந்த காலத்துல, உங்களை போல யாருங்க, உயிரை திரணமா மதிச்சு உதவி பண்ணு வாங்க! - குமார் : ஐயையோ! லட்சுமி : என்னங்க! குமார் : உங்க படுக்கையில உட்கார்ந்து கிட்டே இவ்வளவு நேரம் என்னை மறந்து பேசிகிட்டு இருக்குறேன். லட்சுமி : ஆபத்துக்கு பாபமில்லிங்க.. குமார் , ஆமாங்க... ஆபத்துக்கு பாபமில்லிங்க...பாபம் எப்படி நமக்கு உதவுது பார்த்தீங்களா! இவ்வளவு நீங்க அன்பா இருப்பிங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லிங்க? லட்சுமி : எதிர்பார்க்காதது தானே எப்பவும் நடக்குது! நீங்க பயந்து கிட்டே ஓடி வந்ததை நினைச்சா, எனக்கு ஒரே சிரிப்பா இருக்குது (சிரிக்கிருள்) குமார் : எனக்கும் வெட்கமா இருக்குதுங்க (இருவரும் சிரிக்கின்றனர்) ஒரு பெண்ணுேட படுக்கை அறையில, அதுவும் படுக்கையில படுத்திருந்தது எவ்வளவு தப்பு தெரியுங்களா? ராகவன் : (உள்ளே வந்தபடி) ரொம்ப தப்பு தாப்பா! லட்சுமி என்ன இதெல்லாம் (கோபமா) நான் இல்லாத நேரத்துல...உன்னேட படுக்கை அறையில... லட்சுமி : அப்பா... ராகவன் : பேசாதே! நெருப்பை மடியில கட்டுகிட்டு எத்தனை நாளைக்கு மறைச்சு வைக்க முடியும்? ஒரு நாளைக்கு புகைஞ்சு தானேம்மா ஆகனும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/40&oldid=777102" இலிருந்து மீள்விக்கப்பட்டது