பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ரவி : போதும்...போதும்...மீதி எனக்குப் புரிஞ்சுப் போச்சு! நானும் பயந்தே போயிட்டேன். கலா... உடனே புறப்பட்டு வாயேன்...... உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்? கலா : அப்படியா? இதோ புறப்பட்டுட்டேன். எங்கேயும். போயிடாதீங்க! நீங்க பெரிய ஆர்டிஸ்ட்...... யாராவது வந்து உங்களை அழைச்சுகிட்டு போயிடுவாங்க... போயிட்டா...என்னுல அதை தாங்கிக்க முடியாது. ரவி : கவலைப்படாம வா கலா...நீ கோடு கிழிச்சா. நான் அதை தாண்டவே மாட்டேன். (சிரித்தபடி ரிசீவரை வைத்துக்கொண்டிருக்கும்போது) (ரவியின் நண்பன் நாராயணன் உள்ளே வருகிருன்) நாசா : என்ன ரவி...சிரிச்சுகிட்டே இருக்குறே? தனியா சிரிக்குறது தப்பில்லையா? ரவி : தனியா ஒருத்தன் பாடலாம்...சிரிக்கக்கூடாதா? தாரா : எதுக்கும் ஒரு எல்லே உண்டு...... சேதியை சொன்னு. ...சேர்ந்து சிரிக்க...... நான் இருக்கேன்...சொல்லப்பா! ரவி : அது ஒரு குட் நியூஸ்...அதை முதல்ல என் கலா கிட்டதான் சொல்லனும், அதுக்குப் பிறகுதான் உனக்கு...... - நாரா: கலாவுக்கு முன்னேயிருந்து நான் உனக்கு. பிரெண்ட்ப்பா...ஞாபகம் இருக்கா? ரவி : இருக்கலாம்...... பூவுக்கு முன்னே இலை இருந்ததுங்க. றதுளுலே, இலையை பறிச்சு யாரும் தலையில வச்சிக்கிறது இல்லேப்பா... நாரா : நான் இலையா இருக்கலாம். ஆன, உன் நிழலா இருக்குறேன். அதை மறந்திடாதே ரவி......

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/48&oldid=777110" இலிருந்து மீள்விக்கப்பட்டது