பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S9 கலா! நான் சொல்லலே... என் வாழ்க்கையில வழி காட்டி. பூரீ சாந்தகுமார், சாந்தா , வணக்கம். கலா வணக்கங்க... இந்தாங்க காபி. சாந்த : காபி வேண்டாம்மா... நாள் சாப்பிடுறதுல்லே. இப்ப... இங்கே நான் வந்தது?... ரவி : நீங்க சொன்ன மாதிரியே, சொன்ன நேரத்துல, சரியா வந்திருக்குறிங்க... சாந்த ரவி... நீ சொன்னது போலவே, தந்திடுவேங்கற நம்பிக்கையில தான் நானும் வந்திருக்கிறேன். ரவி : அந்த சந்தர்ப்ப்ம் வந்தாச்சுங்களே... இதோ நீங்க தந்த பணம். அதற்குரிய வட்டி... சாந்த எனக்கு பணம் வேணும்னு யார் சொன்னது? நான் விரும்பியதைக் கேட்பேன். அதைக் கேட்கத்தான் நான் இப்போ வந்திருக்கேன். ரவி : நீங்க எதைக் கேட்டாலும் தர்றதாக அன்னேக்கே சொன்னேன். அதை இப்பவும் மறுக்கலே...எப்பவும் மறுக்க மாட்டேன்... சாந்த : நான் கேட்ட பிறகு, நீ இல்லேன்னு மறுத்து டக் கூடாது! உன்னுடைய மனசாட்சிக்கு விரோதமாக பொய் சொல்லாம உண்மைய சொல்லனும் ரவி. சொல்வியா? ரவி : நிச்சயம் சொல்றேன் சார்...சந்தேகமே வேணும். காந்த இந்த உலகத்திலே நீ உயிருக்குயிரா விரும்புறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/60&oldid=777124" இலிருந்து மீள்விக்கப்பட்டது