பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 அருணகிரி : கண்ணகி மதுரையை எரிச்ச மாதிரி, உன் மனைவி உன்னை எரிக்காம நான் பாத்துக்கறேன்! மாதவன் : சரி! தலைவிதி யாரை விட்டது! படனும்னு இருக்கும் போது என்ன பண்றது. கூப்புடுறேன். நமோ பார்வதி...நமஹ...(அருணகிரி சிரிக்கிருன்) காட்சி-3 உள்ளே பார்வதி, மாதவன், பரமானந்தம், சிந்தாமணி, அருணகிரி பார்வதி : (ஆவலுடன் பார்த்தவாறு பேசுகிருள்) ரேடியோ, பேன், பிரஷ்ஷர் குக்கர், பட்டு மெத்தை, வெள்ளி பாத்திரங்கள், லைட்டுல பார்த்தா ஜொலிக்குதே!அலாவுதீன் பூதம் கொண்டு வந்த மாதிரி இவ்வளவையும் எங்க வீட்டுக்காரர் வாங்கியிருக்கார். பார்த்தீங்களாப்பா! அப்பா பார்த்தீங்களா! பரமானந்தம் : பார்த்தேம்மா! பார்வதி என் மருமகனுக்கு இவ்வளவு சாமர்த்தியம் இருக்குன்னு இப்பதாம்மா தெரியுது! பார்வதி : எல்லாம் என்னலதாம்பாநான் சொல்லலேன்ன இதெல்லாம் எப்படி வரும்! அனுமாருக்கு விஸ்வரூபம் எடுக்க முடியும்னு, ராமர் சொன்ன பிறகுதான் தெரிஞ்சதாம்! மாதவன் : ஆனந்தம் வந்துட்டா என்னை அனுமார்னு சொல்லுவே! ஆந்தைனு கத்துவே! எல்லாம் உன் இஷ்டம்தான். பரமானந்தம் : பாரு! நானுந்தான் 40 வருஷமா முயற்சி செஞ்சேன். என்ன புண்ணியம்? இருந்த சொத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/76&oldid=777141" இலிருந்து மீள்விக்கப்பட்டது