பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வைக்கனுங்கறதுக்காக, நாங்க மூணு பேரும் செஞ்ச ஏற்பாடு. மாத் : இதோ பாரு. இந்த சாமான் எல்லாம் அருணகிரி யோடதுதான். சும்மா கொண்டு வந்து அடுக்கி வச்சேன். பரமா : இந்த ஆபீஸ் லெட்டரை எழுதினது நான்தாம்மா! அருண அதை அவ்வளவு அழகா வாசிச்சது நான்தாம்மா! பரமா : ஏம்மா அப்படி பாக்குறே, விரலுக்கு தகுந்த வீக்கம் வேணும்மா! நமக்கு ஆசை அதிகம் இருக்கலாம். அதுக்கு கஷ்டப்பட்டு உழைக்கனுமே தவிர, குறுக்கு வழியில சம்பாதிக்க முயற்சி பண்ண கூடாதும்மா. பிந்தா : என்னதான் இருந்தாலும், புருஷனை தெய்வமா மதிக்கணும்! அம்மா. வேலைக்குக் போய் வீடு திரும்பற புருஷன் கிட்டே சமாதானமா இருந்தாதான், வீட்டுல நிம்மதி இருக்கும். நாங்க சண்டை போடற மாதிரி பேசிகிட்டதை நீ எவ்வளவு வெறுத்தே! அது மாதிரிதாம்மா நீயும் அனுசரிச்சு போகணும். யார் புரிஞ்சுகிட்டேம்பா! நிம்மதியும் சந்தோஷமும் பணத்தால் மட்டும் வராது. குணத்தாலேயும், நல்ல மனசாலேயும்தான் வருங்கறதை நான் நல்லா புரிஞ்சுகிட்டேம்பா. மாத பார்வதி மணி 9 ஆச்சே பசிக்குதே, விருந்து போடுறியா? பார் : இருக்குற சாதத்தை விரும்பி சாப்பிட்டா, அதுவே விருந்துதாங்க. வாங்க எல்லோரும் விருந்து சாப்பிட போகலாம். பரமா பணம் பத்தும் செய்யும். உண்மைதான். யார் ; போங்கப்பா (எல்லோரும் சிரிக்கின்றனர்) திரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/83&oldid=777149" இலிருந்து மீள்விக்கப்பட்டது