பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 அம்பி: ரொம்ப அடக்கமா இருக்குறிங்க சார். என் பையன் இருக்கானே சார், அது பெரியகதை. காசியிலேயிருந்து, ராமேஸ்வரம் வரை உள்ள எல்லா கோயிலுக்குப் போன பிறகு பொறந்த பையன் சார் இவன். அம்பி: கைமேல் பலன். பையனைப் பாத்த உடனே நான் புரிஞ்சுகிட்டேன்ங்க. (விசில் சத்தம் கேட்கிறது). விரா: யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே! அம்பி: முத்துசாமி வரும் பின்னே, விசில் ஒசை வரும் முன்னே. விரா: பைத்தியக்கார பையன். உலகமே தெரியாதுங்க! ரொம்ப குழந்தை மனசு. என்னமோ நீங்கதான் அவனே கரையேத்தி விட்டுக் காப்பாத்தனும், அம்பி; என்னலே முடிஞ்சதை சொல்லித் தரேங்க. விரா: வர் ரேங்க-டியூஷனை நான் கெடுக்கக் கூடாது. அம். பி. சசிங்க... ம் . முத்து! ஏம்பா லேட்? முத்து: சார்- சாரி- one hour late. சினிமாவுக்கு போனேன். ரொம்ப கூட்டம். சமாளிச்சுக்கிட்டு ஓடிவர்ரேன். அதான் லேட்! அம்பி. சசி - பாடத்தை ஆரம்பிப்போம்-புஸ்தகத்தை எடு, மு; து: புஸ்தகம்னு சொன்னவுடனே அந்த A படத்துலே வர்ர ஒரு சீன் ஞாபகம் வருதுங்க சார். அதுலே காலேஜ் கேர்ள் ஒருத்தி, ரொம்ப கவர்ச்சியா டிரஸ் பன்னிகிட்டு வர்ரா. அம்பி; எப்படி இருக்குரு அவ? முத்து; என் அத்தை பொன்ணு, முறைப் பொண்ணு பானு மாதிரியே ரொம்ப அழகு சார் . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/94&oldid=777161" இலிருந்து மீள்விக்கப்பட்டது