பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 பானு: உங்க குருதான் ட்யூஷன் கத்துக் கொடுத்தாரே! அம்பி: அதெப்படி உனக்குத் தெரியும்? பானு: சிச்சன்லேருந்து எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுத் தானே இருந்தேன். நீங்களும் இங்கேயே பார்த்துகிட்டு இருந்தீங்களே! அம்பி: அப்படியா? பானு: உங்களை எனக்கு ரொம்ப புடிச்சுப் போச்சு, அதனலேதான் நானும் சம்மதிச்சேன். அம்பி: உனக்கு இதுல சம்மதமா, நான் ரொம்ப அதிர் ஷ்டச் காரன். பானு: நீங்க பரீட்சையிலே பாஸ் பண்ணிட்டீங்க! அம்பி.: ஆமா பானு என் வீட்லே என் அப்பா ரொம்ப கோபக்காரரு. என் காலேஜ் ஹாஸ்டல் வார்டன் ரொம்ப ரொம்ப கெடுபிடி, அதனலே, நான் படிப்பே பிரதானம்னு, இப்படியே இருந்து ட்டேன். உலகமே புரியாம போச்சு. பானு: நாம ரெண்டு பேரும் தனியா இருக்குறதைப் பார்த்தா, என் அத்தானுக்கு ரொம்ப கோபம் வந்துடும். அம்பி: பானு! அது ச்குள்ளே நாம ஒரு முடிவுக்கு வரணும், முத்து: என்ன Mr. அம்பி - வீட்டுக்குள்ளே நாடகமா? (கோபமாக) பானு? பானு: ஆமா. , , இதுலே என்ன தப்பு? முத்து: முறை மாப்பிள்ளை நான் இருக்கேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/97&oldid=777164" இலிருந்து மீள்விக்கப்பட்டது