4. நாரத முனிவரின் பூலோக மாத்திரை
விசா இல்லாமல் விசயம் செய்த நபர் யார் என்று விறுவிறுப்பாக அவரைச் சுற்றிக் கொண்டார்கள்.
“விசா எங்கே?’ என்று கேட்டான. “எனக்குத் தேவை இல்லை என்கிறார். ‘'வந்தவர்.
‘ஏன்?'’
வெளிநாட்டு டாலர்கள் நிறைய கொண்டு வந்திருக் கிறேன்; பாரத நாட்டில் முதலீடு செய்ய’ என்றார்.'’
‘உங்களுக்கு விசா தேவையில்லை; தாராளமாக வரலாம்; கதவுகள் திறந்து வைத்து இருக்கிறோம் என்றார்கள்.
பொடி டப்பா எடுத்தார்; காரம் மணம் மிகுந்த பட்டணம் பொடி அவர் கையில் இருந்தது.
‘'இது எப்படிக் கிடைத்தது?'’
“இதுதான் எங்கள் நாட்டுக்கு அதிகம் ஏற்றுமதியா கிறது. டால்லர் சம்பாதித்துக் கொடுப்பதே இந்தப் பட்டணம் பொடிதான்'’ என்றார்.
“உலகத்திலேயே பொடி டப்பாக்கள் இந்தியாவில் தான் தயார் ஆகின்றன; அதுவும் கும்பகோணம் இதற்குப் பேர் போனது” என்று அவர் சொல்லித் தெரிந்து கொண் டார்கள்.
நாரத முனிவரின் பூலோக யாத்திரை பற்றிப் பல பத்திரிகைகளில் முன்னறிவுப்பு வந்திருந்தன. அவரை