பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 ‘அனுமதிக்க முடியாது’ என்றார்.

‘'நாங்களே இந்த வன்முறைப் படங்களைக் கட்டுப் படுத்த வழி தெரியாமல் வாடுகிறோம். நீர் இவற்றை மேலும் வளர்க்க இடம் தரமுடியாது. பக்திப் படங்கள் வேண்டுமானால் பிடிக்கலாம்” என்று அறிவுரை தந்தார்.

‘எங்கள் இளைஞர்கள் துடித்துக்கொண்டு இருக்கி றார்கள். ஆதிகாலத்தில் இராவணன் சீதையைக் கடத் தியது முதல் கடத்தல் படம். அப்புறம் இதைப் போலப் படங்கள் வரவில்லை என்று ஏங்குகிறார்கள்’

இந்தப் படங்களால் கோடிக்கணக்காக டாலர்கள் வந்து குவியும்’ என்றார்.

‘டாலர்கள் வந்தால் சரி’ என்ற சபலம் ஏற்பட்டது.

காந்தியின் படம் அவர் முன்னால் இருந்து அவரைத் தடுத்தது.

‘முடியாது'’ என்று சொல்லி மறுத்துவிட்டார்.

‘அசத்தியங்களுக்குப் பாரதம் துணை போகாது’ என்று சொல்லி முடித்தார்.