பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

பாரதம் விழித்துக் கொண்டது. போராட்டங்கள் தொடரும் என்பதை அறிய முடிந்தது.

ஜனநாயகத்தின் கொடுமைதான் ஊழல்களுக்குக் காரணம் என்பதை அறிந்து அச்செய்தியோடு தெய்வ லோகம் திரும்பிச் சென்றார். வழி அனுப்ப அவர் யாரையும் எதிர்பார்க்கவில்லை.

வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. அவர் யாத்திரை விளம்பர முத்திரையின்றி முடிந்தது.

படம் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை ; மூலதனம் தவருன வழிகளுக்குப் பாரதம் ஏற்காது என்று தெரிந்து கொண்டார்.

தொழில் வளர்ச்சிக்காகத்தான் வெளிநாட்டு மூலதனம் வரவேற்கப்படும். என்ற செய்தி அறிந்து மன நிறை வோடு திரும்பிச் சென்றார்.