பக்கம்:நாடகக் கலை 1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fŮ) x ாாடகக் கலை அவர்கள் எவ்வளவுதான் கடித்தாலும் சிவாஜி கணேச ஆனப்போல் நடிக்கிருர் என்றுதானே சொல்லுவார்கள்: அதில் என்ன புகழிருக்கிறது? கல்ல நடிகர்களின் நடிப்பைப் பார்க்க வேண்டும். அவர்கள் ஒவ்வொரு சுவையையும் எவ்வாறு வெளிப் படுத்துகிருர்கள் என்றும் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனல் அப்படியே காப்பியடிக்கக்கூடாது. ஒவ்வொரு நடிகனும் பயிலும்போதே தனக்கென்று ஒரு தனித் தன்மை-ஒரு பாணி ஏற்படுத்திக் கொள்ளுவது கலது காப்பியடிக்கும் இந்தக் கலை கடிப்பில் மட்டுமன்று; பேச்சு, பாட்டு எல்லாவற்றிலும் இருக்கிறது; பேச முயல்பவர்களெல்லாம் ஒரு சில நல்ல பேச்சாளர்களைப் போலவே பேச முயல்வதைப் பார்க்கிறேன். இதுவும் கல்லதன்று. எப்போதும் எதிலும் தனக்கென்று ஒரு தனித்தன்மையை ஏற்படுத்திக் கொள்ளுவது சிறந்தது. தோற்றம் ஒன்று: மாறுதல்கள். கோடி பல கோடி மனிதர்கள் உலகத்தில் வாழ்கிருர்கள். ஆணுல், ஒருவரைப்போல் மற்ருெருவர் இருப்பதில்லை. எல்லோருக்கும், கால், கை, உடல், త&ు, கண், காது, மூக்கு, வாய் எல்லாம் இருக்கின்றன. பொதுவாகப் ப்ார்த்தால் ஒரே தோற்றம்' ** - ஆராயப் புகுந்தால் எத்தனை எத்தனையோ மாறு: பாடுகள்! மனிதனுடிைய புறத்தோற்றத்தில் மட்டுமா? அகத் தோற்றத்திலும் ஆயிரம் மாறுதல்கள். எல்லாருடைய உருவத்தையும் காம் பார்க்கலாம். உள்ளே இருக்கும் உள்ளம் மக்குத் தெரிவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/101&oldid=1322641" இலிருந்து மீள்விக்கப்பட்டது