பக்கம்:நாடகக் கலை 1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடகத்தில் பிரசாரம் 121 கம் கையில் மட்டும் அதிகாரம் இருந்தால் இந்த நாடகக் கம்பெனியையும், இந்த அவ்வையார் நாடகத்தையும் உடனே காட்டின் பொதுவுடைமையாக ஆக்கிவிட வேண்டும் என்பதுதான். ஆம்; இந்த நாடகக்காரர்களை ஒரே இடத்தில் வெகு காலம் இருக்கவே அனுமதிக்கக் கூடாது. ஊர் ஊராகப் போய் ஒவ்வொரு மாதம் இருக்கச் செய்ய வேண்டும். 'தமிழ் காட்டிலுள்ள எல்லாக் குழந்தைகளும் இந்த நாடகத்தைப் பார்த்துவிட வேண்டும். ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை பார்த்து விடவேண்டும். பள்ளிக்கூடத்தில் எத்தனை வருடம் படித்தாலும் அடைய முடியாத பயனை கம் குழந்தைகள் அடைந்து விடுவார்கள். பழந்தமிழ் காட்டின் பண்பாடு எத்தகையது என்பதை அவர்கள் கன்ருக அறிந்து கொண்டு விடுவார்கள். இதைக்காட்டியும் கமது குழந்தைகளுக்கு நாம் செய்யக்கூடிய நன்மை வேறு என்ன இருககிறது? அவ்வையார் நாடகம், பார்த்து அனுபவிக்க வேண்டிய கலைக்காட்சி மட்டுமல்ல; தமிழர்களின் வாழ்வையே உயர்த்தக்கூடிய கிர்மாணத் திட்டத்தைச் சேர்ந்தது' இவ்வாறு திரு. ரா. கிருஷ்ணமூர்த்தி 1945-ல் எழுதினர். தமிழனின் ஆற்றலைக் கண்டேன் 1948-ல் சென்னையில் அவ்வையார் நாடகத்தைப் பார்த்தபோது திரு. வி. கலியாணசுந்தரனர் அவர்கள் கூறியதாவது: தா.-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/121&oldid=1322666" இலிருந்து மீள்விக்கப்பட்டது