பக்கம்:நாடகக் கலை 1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#32 காடகக் கலை 'அவ்வை நாடகம் த்ளர்ச்சியுற்றிருந்த என் உள்ளித்தில் புதிய உணர்ச்சியையும் கம்பிக்கையையும் ஊட்டி விட்டது. இந் நாடகத்தின் மூலம் தமிழ்நாடு தலை நிமிர்ந்து கிற்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் தனியரசு செலுத்திய தமிழனின் ஆற்றலைக் கண்டு உள்ளம் பூரித்தேன். நாடகம் முழுவதிலும் காட்டிற்கு இன்று வேண்டிய கல்லுரைகளே செம் பொருளாகக் கிடக்கின்றன. இவ்வாறு இன்னும் எத்தனை எத்தனையோ அறிஞர் பெருமக்கள் அவ்வை ங்ாடகத்தைப் பெருமிதத்தோடு வாழ்த்தி வரவேற்றிருக் கிருர்கள். இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? கல்லுரைகளை கல்ல நாடகத்தின் மூலம் சொல்லும் போது அவைகளை நல்லவர்கள், நாட்டின் நலனை விரும்புபவர்கள் எப்படியெல்லாம் வரவேற்பார்கள் என்பதைப் புரிந்து கொள்கிருேம். இப்படிப் பயன் தரும் நாட்கத்தை வெறும் பொழுதுபோக்குக் கலையாக எப்படிச் சொல்ல முடியும். கலை கலைக்காகவே என்று எப்படி வழிபாடு செய்யமுடியும்? நாடகம் மகத்தான சக்தி மக்களைச் செயல்படத் துாண்டும் ஓர் அருமையான சக்தி நம்மிடம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தாமல் வேறு ஏதோ ஒரு கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டு அந்த சக்தியை வழிபடுவதோடு, பூசிப்பதோடு மட்டும் கின்று விடுவதா? அதுபோலவே இருக்கிறது கலை கலைக்காகவே என்பது. மக்களுக்கு விரைவாக அறிவு வளர்ச்சியைக் கொடுப்பதும் புரட்சிகரமான மனமாற்றத்தை உண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/122&oldid=1322667" இலிருந்து மீள்விக்கப்பட்டது